கனடாவில் சுமந்திரன் விரட்டியடிப்பு! நடந்தது என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் நடாத்திய கனேடிய தமிழர்களுக்கான பொதுக் கூட்டத்தில் இரா.சாணக்கியன்; பேச்சை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் எம்.ஏ.சுமந்திரன் தனது பேச்சை ஆரம்பித்து சில நிமிடங்கள் கடந்த நிலையில் பொதுமக்கள் கேள்விகளை கேட்டு திணறடித்தனர்.

இதையடுத்தே பொதுக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டு  எம்.ஏ.சுமந்திரன் பாதுகாப்பாக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார் என உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர் செயற்பாட்டாளர்கள்.

அதிக நேரம் சுமார் 100 வரையான தமிழ் இன உணர்வாளர்கள் மண்டபத்துக்கு வழியே பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அதே வேளை மண்டபத்துக்கு உள்ளேயும் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர்.

பொதுமக்களது எதிர்ப்பாளர்களது ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு மதிப்பளித்து இடம் அளித்த பொலிஸார் நிலைமையை மிகவும் மனிதநேயத்துடன் கையாண்டு கூட்டத்தை கலைந்து செல்ல வழிவகை செய்தனர்.

எனினும் அங்கே கடமையிலிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் ஒருவர் மீது கையை வைத்து வழியே பிடித்து தள்ளியதால் மேலும் எதிர்ப்பு வலுப்பெற்று மோசமான நிலையை அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் விபரிக்கையில் நேற்று மாலை கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எம்.ஏ. சுமந்திரன் பேசிக் கொண்டிருந்த போது பங்கெடுத்திருந்த பலரும் பேச்சைத் தொடரவிடாமல்  உரத்த குரலில் கேள்வி எழுப்பத்தொடங்கினார்கள்.  

கூட்டத்தில்; பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார். இதன் மூலம் இரா.சாணக்கியனிற்கான செய்தி சொல்லப்பட்டதுடன் கிழக்கிற்கான கௌரவமும் வழங்கப்பட்டள்ளது.

அவையோர் எழுத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று பலமுறை சொல்லப்பட்டது. இருந்தும் அவற்றைச் செவிமடுக்காது தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரனை பேச விடாது குரலெழுப்பினர்.


No comments