மீண்டும் இந்திய மீனவர்கள்?



மீண்டும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

இதனால் நேற்றிரவு இலங்கை மீனவர்கள் தொழிலில்  ஈடுபட முடியாமல்  கரை  திரும்பியதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்குள் இந்திய மீனவர்கள்  மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் மாதகல் பகுதி மீனவர்களே இவ்வாறு தொழிலில் ஈடுபட முடியாமல் வெறுங்கையுடன் வீடு திரும்பியுள்ளனர்.

இந்திய மீனவர்கள் இனி இலங்கை எல்லை கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என அண்மையில் அவர்கள் அறிவித்திருந்த நிலையில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


No comments