கரைச்சி பிரதேச சபைக்கு தூக்குக் கயிறுடன் வந்த உறுப்பினர்


அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூக்கு கயிற்றுடன் அத்தியாவசிய பொருள்களை சுமந்துவாறு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா, கரைச்சி பிரதேச சபை அமர்வுக்கு வருகை தந்தார்.

கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று (21) நடைபெற்றது.

இதன் போது, பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா, விலை அதிகரித்து மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ள சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து கொண்டு, கழுத்தில் தூக்கு கயிற்றை அணிந்துவாறு சபை அமர்வில் கலந்துகொண்டு, தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

மக்களை பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக, அரசாங்கத்தை சபையில் வைத்து, கடுமையாக அவர் விமர்சித்தார்.


இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜாவின் போராட்டம் நியாயமானது என்று, பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments