சிதைகிறது பேரரசர் பிம்பம்:தேர்தலில் தோல்வி!



சிங்கள மக்களிடையே கட்டப்பட்ட பேரரரசர் பிம்பம் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்புக்களிடையே வேகமாக சிதைந்துவருகின்றது.

இதனை பகிரங்கமாகவே கோத்தபாய முதல் அமைச்சர்கள் ஈறாக பொதுவெளியில் பிதற்ற தொடங்கியுள்ளனர்.

விமர்சனங்களுக்கு உள்ளாகுவது ராஜபக்ஷ குடும்பத்துக்கு சாதாரணமாகிவிட்டது என தெரிவித்த விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சுசீந்திர ராஜபக்ச  , விமர்சனங்களுக்கு மத்தியில் எமது கிராமங்களுக்கு நிச்சயம் நாம் செல்வோம் என தெரிவித்துள்ளார்.

நாளை தேர்தல் நடைபெற்றால் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும். விஷத்தை உண்டு மக்கள் இறந்தாலும் பரவாயில்லை. எனக்கு தேர்தல்வெற்றிதான் முக்கியமென ஜனாதிபதி கருதவில்லை.

சேதன பசளை திட்டம் தற்போது அரசியலாக்கப்பட்டுவிட்டது.சேதன பசளை திட்டம் தொடர்பில் ஒரு சில குறைப்பாடுகள்காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இதனை தேசிய பிரச்சினையாக கருத்திற்கொண்டுஅனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றுள்ளார்.

ஏற்கனவே உர விவகாரங்களுடன் தொடர்புடைய அமைச்சர் சுசீந்திர ராஜபக்சவை விடுத்து தனது கொடும்பாவிகள் எரியூட்டப்படுவதாக தெரிவித்திருந்த விவசாய அமைச்சர் மகிதானந்த அழுத்கமகே தேர்தலில் தோல்வி நிச்சயமெனவும் உறுதிபட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments