இலங்கை காவல்துறைக்கு பாலியல் லஞ்சம்?

 



மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சராசரியாக தாக்குதலை நடத்திய இலங்கை காவல்துறை அதிகாரி  தொடர்பில் கடும் அழுத்தங்கள் எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் வண்டியில் பயணித்தவரை நிறுத்தியபோதும் அதனை பொருட்படுத்தாமல் குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றதாலேயே அதிகாரி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிக்கு தாக்குதலை நடத்த எந்த உரிமையும் இல்லை என தெரிவித்துள்ள சரத் வீரசேகர, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அத்தோடு காவல் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரி அல்லது பிற கீழ்நிலை அதிகாரிகள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்தால் பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இலஞ்சம் கோருதல், பாலியல் இலஞ்சம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் இலங்கை காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


No comments