நாங்கள் சுத்தம் :நடேசனிடம் மீண்டும் வாக்குமூலம்!



மேலதிக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மீள முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், திருக்குமரன் நடேசன் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார். 

அதேவேளை சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவணங்கள் தொடர்பில், கிடைக்கப்பெற்றுள்ள சகல முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளின்போது அவதானம் செலுத்தப்படுமென கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments