யாழில் வன்முறை கும்பல் வீடு புகுந்து அட்டகாசம்:


நாவற்குழி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது. 

நாவற்குழி ஜே / 294 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் ஜன்னல்கள், கதவுகளை உடைத்து அட்டகாசம் புரிந்ததுடன், வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகன்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி  விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த தந்தை மற்றும் இரு மகன்களையும் அயலவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments