அரை அவியல் வடமாகாண அதிகாரிகளால் கொத்தணி?



வடமாகாணசபையின் பெண் அரச அதிகாரி ஒருவரது கூத்தினால் கல்வி அமைச்சு மற்றும் மகளிர் விவகார அமைச்சில் கொரோனா கொத்தணி பற்றி அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் அதிகாரியான அஞ்சலிதேவி சாந்தசீலன் என்பவர் நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு, அரச அலுவலகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றபடியேறிய பரிதாபம் நடந்துள்ளது.

வடமாகாண கல்வி அமைசசில் கடமையாற்றும் குறித்த பெண் அதிகாரிக்கு அலுவலக மட்டத்தில் கடந்த 16ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

எனினும் அவரது தனிப்பட்ட முயற்சியினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்தக் குழப்பநிலையினால் பெண் அதிகாரியின் கணவரான சாந்தசீலன் அரச அலுவலகர் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கூறப்பட்ட சுயதனிமைப்படுத்தல்  நடவடிக்கைகளை பின்பற்றவும், குடும்ப விவரங்களையும் வழங்கவும் மறுத்துள்ளார்.

அவர் வடமாகாண மகளிர் விவகார அமைச்சில் பணியாற்றிவருவதாக கூறப்படுகின்றது.

எனினும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் பெண் அதிகாரிக்கு தொற்றுள்ளதாக கடிதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பெண் அதிகாரியின் கணவரையும் வீட்டில் உள்ளவர்களையும் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு  அன்டிஜன் பரிசோதனைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் நேற்றுவரை சமுகமளிக்கவில்லை. அதனால் இன்று பரிசோதனையை முன்னெடுக்க வருகை தருமாறு சுகாதார மருத்துவ அதிகாரியினால் அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்று சமுகமளிக்கவில்லை.

ஆயினும் இருவரும் அலுவலகத்திற்கு சென்றிருந்ததாக சொல்லப்படுகின்றது.

அதேவேளை நீதிமன்றிற்கும் மாநகர சுகாதார வைத்திய அதிகாரிக்கும் கடிதங்களை எழுதிக்கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் தமது கடமைக்கு ஒத்துழைக்கவில்லை, விவரங்களை வழங்கவில்லை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து அரச அலுவலகருக்கு கட்டளை வழங்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் இன்று பொதுச் மாநகர சுகாதார வைத்திய அதிகாரியால் விண்ணப்பம் செய்யப்பட்டது.

விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று, நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு ஒத்துழைக்கவேண்டும், அவரினால் கோரப்படும் விவரங்கள் வழங்கப்படவேண்டும் என்று கட்டளை வழங்கியுள்ளது.

தங்களை தாங்களே புத்திஜீவிகளாக சொல்லிக்கொள்ளும் இத்தகையவர்களால் கல்வி அமைச்சு,மற்றும் மகளிர் விவகார அமைச்சில் கொரோனா கொத்தணி ஏற்படலாமென சந்தேகிக்கப்படுகின்றது.


No comments