மனைவி மற்றும் இரு பிள்ளைகளைக் காணவில்லை! வவுனியாவில் கணவன் முறைப்பாடு

வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என அவரது கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா - 1 ஆம் ஒழுங்கை - மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த சற்குணசிங்கம் தமிழினி என்ற 32 வயதுடைய மனைவியும், பிள்ளைகளான டனிஸ்கா வயது 5, கனிஸ்கா வயது 4  ஆகியோரையும் கடந்த 2021.08.10 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என தெரியவந்துள்ளது.
கணவர், கடையொன்றிற்கு வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது, வீட்டிலிருந்த மனைவி, பிள்ளைகளை காணவில்லை என கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  காணாமல்போன தாய், பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், 0777111103 / 0775945839 ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments