வடமாகாணசபை:கொவிட் மருந்து விறிசலுடன் சரி!

வடமாகாண பிரதம செயலாளருக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. அதனை அடுத்தே சுகாதார பிரிவினர் அவருடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனினும் அவ்வாறு தனிமைப்படுத்தலின்றி வெறுமனே மருந்து விசிறல் மட்டுமே நடந்ததாக சொல்லப்படுகின்றது.. 

இதேவேளை வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதனின் பிரியாவிடை வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில் தற்போதைய பிரதம செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அத்துடன் நிர்வாக தேவைகள் நிமித்தம் வடமாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள் , திணைக்கள அதிகாரிகள் பலரும் பிரதம செயலாளருடன் தொடர்பினை கொண்டு இருந்துள்ளனர்.

No comments