கவிழ்ந்தது காரைநகர் பேரூந்து!



கொரோனா தொற்றினையடுத்து போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காரைநகரில்  இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த  இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து கல்லுண்டாய் வீதியில் குடைசாய்ந்ததில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.இந்நிலையில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் வேகமாக வந்த பஸ் மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.



No comments