மீன்பிடி வலைகளிற்கு தீயிட்டு போராட்டம்?

அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளால் அழிக்கப்பட்ட தமது மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்து மீனவர்கள் வடமராட்சி மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.

வடமராட்சி கடற்பரப்பில் , இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளது, அத்துமீறிய தடைசெய்யப்பட்ட தொழில்களால் உள்ளுர் மீனவர்கள் பாதிக்கப்பட்டேவருகின்றனர்.

அத்துடன் மீனவர்களது வாழ்வாதாரம் அழிவுக்குள்ளாகிவருகின்றது.

இந்நிலையில் இந்திய மீனவர்களால் அழித்து சேதமாக்கப்பட்ட படகுகளை உள்ளுர் மீனவர்கள் தீயிட்டு எரித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

No comments