நாளை திறப்பு: நேற்று 67 மரணம்!



நாளை முதல் அரச அலுவலகங்கள் திறப்பு,மாகாணங்களிடையே போக்குவரத்து திறப்பென இலங்கை இயல்புநிலைக்கு திரும்பவதான அறிவிப்பின் மத்தியில்  நேற்று  67 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

30 வயதுக்கு உட்பட்டவர் உள்ளிட்ட 36ஆண்களும் , 31 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதில் 56 பேர் 60வயதிற்கு மேற்பட்டவர்கள். 

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,508 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 308,839 ஆக அதிகரித்துள்ளது.


No comments