டெல்லி பாணி:ஒரே அடுக்கில் 42 உடலங்கள் தீக்கிரை!



வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஆலயங்கள் மூலம் கொரோனா தொற்று வேகமடைந்துள்ளது.ஆலயங்கள் மூலம் நாள் தோறும் பலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.

இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்த 42 பேரின் சடலங்களை தகனம் செய்வதற்கு, ராகம சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ராகம போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் உள்ள கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தோரின் சடலங்களே, தகனம் செய்யப்பட்டவுள்ளன.

அந்த பிரேத அறையில் சடலங்களை வைப்பதில் நெருக்கடியான நிலைமையொன்று எற்பட்டிருந்தது அதனையடுத்தே. 42 சடலங்களையும் ஒரேநேரத்தில் தகனம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


No comments