மூன்றாவது தடுப்பூசியும் வருகிறதாம்!

இலங்கையில் மக்களுக்கு மூன்றாவது ​தடுப்பூசி டோஸ் வழங்குவதற்கு  திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால், மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு கொவிட்-19 செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதுதொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கை ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார் .

இந்நிலையில், சகல சுகாதார பணியாளர்களுக்கும் முதலில், மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments