யாழ் கட்டைக்காட்டில் 130 கிலோ கஞ்சா மீட்பு!!


யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வீட்டில் இருந்த சுமார் நூற்று முப்பது கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலில் அடிப்படையிலேயே  வீட்டில் குப்பைகளுடன் கஞ்சாவை புதைத்து வைக்க முற்பட்டபோதே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையால் கைது செய்யப்பட்டவரும் கஞ்சாவும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் உள்ளதாகவும் மருதங்கேணி காவால்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments