கூகிள் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் - சுந்தர் பிச்சை


கூகிள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு மீண்டும் சென்று பணியாற்ற வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்து பணிபுரியம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் வலைப்பதிவில் தெரிவிக்கையில்:-

கூகிள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்துவருவது அலுவலகம் திரும்புவதை சிக்காலாக்கியுள்ளது.

எனவே, வீட்டிலிருந்து பணிபுரிவது அக்டோபர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஒரிரு வாரங்களில், இந்த முறை அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. வரும் மாதங்களில் மற்ற நாடுகளுக்கும் இது விரிவு செய்யப்படவுள்ளது.

அந்தந்த நாடுகளின் தடுப்பூசி கையிருப்பின் அடிப்படையில் இந்த முறை அமல்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் அனைவருக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் என நம்புகிறேன் என அவர் தனது பதவில் தெரிவித்துள்ளார்.

No comments