அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்!!


அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகளவில் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மீண்டும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரானாத் தொற்று நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் ரோசெல் வலென்ஸ்கி தெரிவிக்கையில்:-

தடுப்பூசி செத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வேளையில் டெல்டா வகை வைரஸ் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது புதிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே கணிசமான மற்றும் அதிக வைரஸ் பரவல் உள்ள பகுதிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் உள்பட அனைவரும் பொது உட்புற இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரை செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றுப் புதன்கிழமை புதிதாக 61 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அமெரிக்க மக்கள் தொகையில் 49 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரு டோஸ் செலுத்தப்பட்டது.

No comments