வடகிழக்கிற்கு தீர்வாம்?



இலங்கையில் மேல் மாகாணாத்தில் முழுமையாக 30வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு மற்றும்  கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி, இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளாராம்.

அதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட  அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாம்.

No comments