வவுனியா:மரமேறவிட்டு அணில் பிடித்த கதை!


இலங்கையில் அரசு அண்மைக்காலமாக மரமேறவிட்டு அணில் பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளது.

முடக்க நிலை தளர்த்தப்பட்ட பின்னராக நகரப்பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் பொலிசாரால் முடக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை இன்று காலை முதல் பொதுமக்களை தடுத்து வைத்து காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், சுகாதாரப் பிரிவினரால் இன்று காலை வவுனியா நகரின் பசார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி குறிப்பாக சுற்றிவளைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டு நான்கு இடங்களில் சுகாதாரப் பிடிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பசார் வீதி சந்தி, தர்மலிங்கம் வீதி சந்தி, சந்தை உள்வட்ட வீதி சந்தி, மில் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி என்பவற்றில் வைத்து சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.



இதன்போது வர்த்தக நிலையங்களில் பணியாற்றியோர், நகருக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்தோர், வாகனச் சாரதிகள் என சுமார் 400 இற்கு மேற்பட்டவர்களுக்கு இதன்போது பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன்,

பிசீஆர் எடுத்த பின்பே மக்கள் நகரில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். குறித்த பிசீஆர் முnவுகைளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.


நகரை திறந்து விட்டபின்னர் முன்னெடுக்கப்படும் சோதனையை பொதுமக்கள் மரமேற விட்டு அணில் பிடித்த கதையுடன் ஒப்பிட்டு நையாண்டி செய்துவருகின்றனர்.


No comments