பயணத் தடையிலும் மதுபான விற்பனை! எடுத்துச் சென்றவர் கைது!


நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நாடு பூராகவும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் அரியாலை மாம்பழம் சந்திக்கு அண்மையில் முச்சக்கர வண்டி ஒன்றில் மதுபானத்தை விற்பனைக்காக எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 300 பியர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments