கொரோனாவாவது லயன்ஸ் கிளப்பாவது!

 



ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சியில் பிரச்சார பிரங்கியாக அறியப்பட்டவர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி.

தமிழரசுக்கட்சியை குறிப்பாக ஏம்.ஏ.சுமந்திரனை யார் விமர்சித்தாலும் தானாக முன்வந்து விமர்சித்தவரை குடும்பத்துடன் இழுத்து சேறுபூசுவது இவரது தலையாய பணியாகும்.

அவ்வகையில் எம்.ஏ.சுமந்திரனை விமரசித்தமைக்காக ஊடகவியலாளர்களை விபச்சாரியாக்கி பிரச்சாரம் செய்தவரும் இவரேயாவார்.

ஆனாலும் தமிழரசில் அவரது பருப்பு அவியாததுடன் அவரை மிஞ்சி பல ஆமாம் சாமிகள் உருவானதையடுத்து தூக்கிவீசப்பட்டாலும் அரசியல் கனவை மாகாணசபை தேர்தல் வரை காவித்திரிபவராகவும் இப்போது இருந்துவருபவர்.

இந்நிலையில் அரிமா கழகம் ஊடாக தனது அரசியலை நகர்த்தி அனைவருக்கும் இந்நபர் அரசியல் கற்றுதரும் இந்நபர் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து திருட்டாக வருகை தந்த நபருடன் சமூக இடைவெளி,முகக்கவசம் என ஏதுமின்றி எடுத்து பகிர்ந்துகொண்ட புகைப்படமூலம் போலி முகம் அம்பலமாகியுள்ளது.


ஆரிமா கழக தேர்தலிற்கான ஆதரவு திரட்டலிற்காக முடக்கத்தை கிடப்பில் போட்டு வந்திருந்த நபர் தொடர்பில் செய்திகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் முடங்கிக்கிட வீரப்பிரதாபமாக விளம்பரப்படுத்தி ஆட்களை திரட்டும் இந்நபர்களே விபச்சாரத்தை முன்னெடுப்பவர்களென சீற்றத்துடன் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.   




No comments