விதிகளை மறுத்த டிவிட்டர்! எச்சரிக்கை விடுத்த இந்தியா!

 

இந்தியாவின் துணைகுடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடுவின் பக்கத்தில் வெரிபிகேஷனுக்கான நீல நிர டிக் அகற்றப்பட்டது சர்ச்சையான நிலையில்,

பின்னர், அவருக்கு புளு டிக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கோபமடைந்துள்ள அரசு, டிவிட்டருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்தியஅரசு, சமூக இணையதளங்களை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சமூக வலைதளக் கொள்கைகளை அறிவித்து உள்ளது. அதை சமூக வலைதளங்கள் பின்பற்றி,  அதை கண்காணிக்க உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இதற்காக கொடுக்கப்பட்ட காலக்கெடுவும் முடிவடைந்துள்ளது.

இந்திய அரசின் விதிகளை ஏற்க மறுத்து, டிவிட்டர், வாட்ஸ்அப் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கு தள்ளுபடியானது.  இருந்தாலும், அரசின் விதிமுறைகளில் சில மாற்றங்கள் தேவை என டிவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய அரசு இறுதி எச்சரிக்கை அளித்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், புதிய விதிமுறைகளை பின்பற்றவும் அதை கண்காணிக்க இந்தியாவைச் சேர்ந்த நபர்களை அலுவலர்களாக நியமிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால் உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

முன்னதாக இன்று (ஜூன் 5) காலை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் புளூ டிக் நீக்கப்பட்டு, அது சர்ச்சையாக மாறியப் பின்னர் திருப்பித் தரப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments