மரணம் 47:வடக்கில் 37 தொற்று!
இலங்கையில் முடக்கநிலை இன்று திங்கள்கிழமை முதல் விலக்கப்பட்டுள்ளநிலையில் கொரோனா நேற்றுமுன்தினமும் தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,581 ஆக அதிகரித்துள்ளது
இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்தில் நேற்று 37 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 585 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை - 08 பேர்,
கரவெட்டி – 01
சண்டிலிப்பாய் - 04 பேர்,
வேலணை - 03 பேர்
பருத்தித்துறை – 01
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 02 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலை - 03 பேர்,
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலை -04 பேர்,
சங்கானை பிரதேச வைத்தியசாலை -01
மன்னார் மாவட்ட வைத்தியசாலை - 02 பேர்,
வவுனியா ஆடைத் தொழிற்சாலை - 06 பேர்,
வவுனியா தெற்கு – 01
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை – 01
Post a Comment