திருகோணமலையில் பெண்ணின் சடலம் மீட்பு


திருகோணமலை - சாந்திபுரம் பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் அதில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (24) மாலை இவருடைய சடலம் வாய்க்காலில் மிதந்து கொண்டிருக்கும் போது பிரதேச இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண் திருகோணமலை - சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த அயிலந்தன் பெருமாள் (78 வயது) எனவும் தெரியவருகின்றது.

தனது மகனின் வீட்டுக்கு சென்று நேற்று வீட்டிற்கு முன்னால் உள்ள வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற போது தவறுதலாக விழுந்து வாய்க்கால் ஊடாக மிதந்து வந்ததாகவும், இதனை அடுத்து அவரது சடலத்தை மீட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

No comments