திருகோணமலை விபத்து! ஒருவர் பலி!
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியின் 99 ஆம் கட்டை பகுதியில் சிற்றூர்தி மற்றும் பாரவூர்த்தியுடன் நேருக்கு நேர் மோதியதில் சிற்றூர்த்தியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிற்றூர்த்தியில் பயணித்த திருகோணமலை கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விபத்துடன் தொடர்புடைய பாராவூர்த்தியுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தம்பலகாமம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment