யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் போராட்டத்தில் குடும்பம்


யாழில் மேலும் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் உயிரிழரந்துள்ளார்.

இதனிடையே கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக 03 சிறுவர்களும் தந்தையும் நேற்று (20) உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளர்கள் 24 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒரு பெண்ணின் பிள்ளைகளும் கணவனுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி அக்கராயன் மணியங்குளத்தினைச் சேர்ந்த தன்னுடைய மனைவிக்கு நேற்று பிற்பகல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போதிலும் தனக்கு குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை என்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேருவதாகவும் தம்மை சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துமே போராட்டத்தில் ஈடுபடுவதாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.


No comments