அரசியல் கைதிகள் விடுதலைக்கு பேச்சு!




இலங்கையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர்ந்தும் தேக்க நிலையே காணப்படுகின்றது.

இதனிடையே கொரோனா பெருந்தொற்றையடுத்து சிறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு கைதிகளை பிணையில் வீடு செல்ல அனுமதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபர் காவல்துறை அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில் தமிழ் அரசியல் கைதிகளையும் அவ்வாறு பிணையில் விடுவிக்க குடும்பங்கள் கோரியுள்ளன.

இதனிடையே இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்திந்து தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.


இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர் அமைச்சரிடம் ஒப்படைத்தனர். அதன்படி, விசாரணை முடியாத கைதிகள், தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் என அரசியல் கைதிகள் குறித்த முழுமையான விபரத்தை கையளித்ததுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்;, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பலும் நாடாளுமன்னற உறுப்பினர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசாங்கத் தரப்பில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர். 


No comments