தொடர்ந்தும் முடக்கம்:விலக்கம் இல்லை!

 



எதிர்வருங்காலங்களில் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படமாட்டாதென அரசு அறிவித்துள்ளது.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை நீக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 31 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments