யாழ்ப்பாணத்தில் 15பேர் அடையாளம்?


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று  கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபருக்கும் கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டஙகளில் தலா 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 4 பேருக்கும் , தெல்லிப்பழை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மூவருக்கும் (அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர்) சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தலா ஒருவருக்கும் , திருநெல்வேலியில் உள்ள நோதேர்ன் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் என 15பேருக்கு  தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கிளிநொச்சி தர்ம்புரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும் , வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு , முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும்  தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments