பூநகரியில் பெருமளவு கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் பெருமளவான கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இன்று

செவ்வாக்கிழமை அதிகாலை  3 மணியளவில் பூநகரி பள்ளிக்குடா காட்டுப்பகுதியி் மறைந்து வைக்கப்பட்டிருந்த 286.521 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

எனினும் இக்கஞ்சா கடத்தலும் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சா அனைத்தும் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


No comments