ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான அரசாணையினை வெளியிட்ட்து தமிழக அரசு!


கொரோனா தொற்று பரவல் காரணமாக, நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்குதேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து முடிவெடுக்க தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து,  முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என திமுக உள்பட அனைத்துக்கட்சிகளும் ஒப்புதல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை இயங்க  அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு  இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அறிக்கை தர உத்தரவு என அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடு குறித்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments