கோத்தாவிற்கு பின்னடைவு:சிதறும் கத்தோலிக்க வாக்குகள்!



உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மத தீவிரவாதமே காரணம் என குறிப்பிட்டு இலங்கை அரசு பதினொரு மத அமைப்புகளை தடை செய்து, பலரை கைது செய்துள்ள நிலையில் குண்டுத் தாக்குதலுக்கு மத தீவிரவாதம் காரணமல்ல. மத தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முற்பட்ட சிலரது செயலே அது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 


ஏப்ரல் 21 எமது சகோதரர்களை தாக்கியவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர். அந்த மத அடிப்படைவாதிகளை தமது கை பொம்மைகளாக பயன்படுத்தி, தமது அரசியல் அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ள முன்னின்றவர்களே அதனைச் செய்தனர்.  

தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சில குழுவினர் முன்னெடுத்த முயற்சியின் பிரதிபலனாகவே அதனை நாம் பார்க்கின்றோம். மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ மற்றொருவரை துன்புறுத்துவதற்காக பயன்படுத்த வேண்டாம் என நாட்டிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை முன்வைக்கின்றோம்.


அத்துடன் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஏனையவர்களை கொலை செய்யும் சிந்தனையிலிருந்து விடுபடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இனதுவேசத்தை தூண்டி தேர்தல் அறுவடையில் ஈடுபட்ட கோத்தபாய தரப்பிற்கு அண்மைய பேராயரின் கருத்துக்கள் பின்னடைவை தோற்றுவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments