திங்கட்கிழமை :தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க அழைப்பு



எதிர்வரும் திங்கட்கிழமை வட கிழக்கெங்கும்  கறுப்பு கொடிகளை பறக்க விட்டு தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.பொது அமைப்புக்கள்,கட்சிகள் என பலதரப்புக்களும் மக்களிடையே தேசிய துக்கதினத்திற்கான அழைப்பை விடுத்துவருகின்றன.

மறைந்த முன்னாள் மன்னார் ஆயரின் இறுதி திருப்பலி திங்கள் மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்  இடம்பெறவுள்ளது.


மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.

சிற்றாலயத்தில் அரசியல் பிரமுகர்கள், மதகுருமார் சமூக ஆர்வலர்கள் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

யாழ் மறைமாவட்ட ஆயர், குருமுதல்வர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று திருவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


மன்னார் ஆயரின் இறுதி திருப்பலி எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்பொழுது யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஆயருடைய திருவுடல் நாளை காலை 11 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை மதியம் மன்னாருக்கு எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை இறுதி திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1981 ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை மன்னார் மாவட்ட இரண்டாவது ஆயராக கடமை யாற்றி ஓய்வு பெற்று சுகவீனமுற்று யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இவ்வுலகை விட்டு சென்றிருந்தார்.


தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்று கொண்ட ஒரு மனிதனாக நின்று அவர் தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதன் ஆவார்.


இலங்கையினுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின்  முன்னால் சென்று மிகத் துணிச்சலோடு ஆதாரத்தோடு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் கொல்லப்பட்டார் கள்என்ற செய்தியை வெளிப்படையாக துணிச்சலுடன்  சொன்ன ஒரு மனிதர் மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆவார்.


No comments