பிரேசிலில் ஒரே நாளில் 3,668 பேர் கொரோனாவால் பலி!


பிரேசிலில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று மட்டும்  3,668 பேர் உயிரிழந்துள்ளனர். 86,704 பேருக்கு கொரோனா தொற்று புதிதாகப் பரவியுள்ளது.  இதன்மூலம் அங்கு

உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,17,936 ஆக அதிகரித்துள்ளது. 

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 1,26,64,058 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,74,483 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 12,71,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments