மாகாணசபை தேர்தல் எப்படி?


மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக அமைச்சரவை எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தமது கட்சி உடன்படுவதாக சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு அமையவே நடைபெற வேண்டும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி கட்சியின் மத்தியக்குழு கூடவுள்ளதாக பொதுச்செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தற்போது செயல்பட்டு வரும் மாகாண சபைகளை செயல்படுத்துவதற்காக, புதிய அல்லது பழைய முறை என ஏதாவது ஒரு முறையில் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை தொடர்பாக அமைச்சரவை எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தமது கட்சி உடன்படுவதாக அதன் பொதுச்செயலாளர் சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாகாண சபை தேர்தலை பழைய முறையின்படி நடத்துவதே கட்சியில் உள்ள பெரும்பான்மையானவர்களின் கருத்து என, ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிடுகின்றது.

இது தொடர்பாக கட்சி மேலும் கலந்துரையாடல்களை நடத்தும் என்று தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.


No comments