டக்ளஸ் வேண்டாம்:அரசியல் என்கிறார் டக்ளஸ்!


அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அறிவித்துள்ளார்.

இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்புகள் ஒவ்வொன்றும் உள் நோக்கங்களுடன் செயல்படுகின்றனவென திருவாய் மலர்ந்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.


உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தன்னை கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.


அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தார்.

இதனை மறுதலித்துள்ள வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காணாமல் ஆக்குவதை முன்னெடுத்த கோத்தபாயவிடமிருந்தும் அவரது முகவராக இருந்து அரங்கேற்றிய டக்ளஸ் இடமிருந்தும் நீதியை எதிர்பார்க் க முடியாதென தெரிவித்துள்ளார்.


No comments