கோத்தா உத்தரவில் இந்திய மீனவர்கள் விடுதலை!

 


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  நாகப்பட்டினம், ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடராமல் படகுடன் விடுதலை செய்து தாயகம் திரும்பி அனுப்புமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருகோணமலை மற்றும் காரைநகர் கடற்படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்களையும்; அவர்களது நான்கு படகுகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தமது படகுகள் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த புதன் கிழமை ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 400க்கும் அதிகமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். 

மீனவர்கள்  தனுஸ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் கைது செய்வோம் என  ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  மீனவர்கள் நாலாபுறமும் சிதறி இந்திய கடல் எல்லைக்குள் வர முயற்சித்தனர்.

அப்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த மகேஸ் மற்றும் மரிய சிங்கம் ஆகிய இருவரது படகில் சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.



No comments