டக்ளஸ் பம்மாத்து அவியாது!



அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது கூறிவருகின்ற கருத்துக்கள் அவரது அரசியல் தேவைகளிற்கானதேயென தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

அவ்வகையில் பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்லப்போகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது ஏமாற்று வேலையெனவும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

“டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தவரையில் அவர் அமைச்சர். தனது அமைச்சுப் பதவியை தமிழ் மக்கள் மத்தியில் தக்கவைப்பதற்கான ஒரு பம்மாத்தாகவே நாம் இந்த விடயத்தைப் பார்க்கின்றோம்.

ஒரு அதிகாரமுள்ள அமைச்சருக்குத் தெரியும் கடற்கரையில் இருந்து பத்து கிலோமீற்றருக்கு உட்பட்ட பிரதேசத்தில் இந்திய ரோலர் வந்து தொழில் செய்கின்றது. இதை கரையில் இருந்து நாங்கள் பார்க்கின்றோம்.

அனைத்து கடற்கரையிலும் அதவாவது, கொக்குத்தொடுவாயில் இருந்து தீவகம் வரை கடற்கரைகள் படைக்கு இந்திய ரோலர்கள் அத்துமீறி வருவது தெரியும். எனவே, அதனைப் பிடிக்க முடியாது என்முழுவதும் 50 மீற்றருக்கு ஒரு கடற்படையின் பாதுகாப்பு அரண் அமைந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற் றால் ஏன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்வதென்று யாரை ஏமாற்றுகின்றார்? இது மக்களை ஏமாற்றும் விடயம்” என்றும் முரளிதரன்  குறிப்பிட்டுள்ளார்.


No comments