மீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்?



கோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது.

இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடந்துள்ளது.

மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும்.

வடக்கு - கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


No comments