வரவேற்பறை சந்திப்பை பிரமாண்டமாக்கிய புலனாய்வு?


வடமாகாண ஆளுநர் அலுவலக வருடாந்த பணிகள் ஆரம்பிப்பிற்கு சென்றிருந்து யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை வரவேற்பு பகுதியில் சந்தித்த இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் கிருஸ்ணமூர்த்தி பலதரப்பட்ட விடயங்கள் பற்றியும் பேசியுள்ளார். குறித்த சந்திப்பின் போது வரவேற்பு பகுதியில் காத்திருந்த வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவிகே.சிவஞானமும் புகைப்படத்தில் அகப்பட்டு கொண்டார்.


இதனை தமிழரசு-இந்திய தூதரகம்-மணிவண்ணன் சந்திப்பாக புலனாய்வு பிரிவு கதைகட்டிவிட இன்று காலை சமூக ஊடகங்களில் இது பேசு பொருளாகியிருந்தது.

இதனிடையே ஆளுநர் நடத்திய நிகழ்வில் படை அதிகாரிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments