விளக்கேற்ற சொன்ன விவகாரம்:விசாரணையாம்?



மாவீரர் தினம் தொடர்பில் மன்னாரில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நால்வரிடம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு , இன்று காலை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர்  வி.எஸ்.சிவகரன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், சட்டத்தரணி அன்ரடனி றொமோல்சன் மற்றும் பிரேம் குமார் ஆகியோரிடமே குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின நினைவேந்தல்களை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றத்தினூடாக இலங்கை காவல்துறையினர்; தடை உத்தரவைப் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 25ஆம் திகதி விசேட ஊடக சந்திப்பு நடைபெற்றது. ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் நால்வரும் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

குறிப்பாக, அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றுங்கள் எனத் தெரிவித்த கருத்து தொடர்பாகவும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.


No comments