வாக்கு எண்ணிக்கையில் மோசடி! புலம்பும் டிரம்ப்


தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தபால் வாக்குமுறை ஊழல் நிறைந்தது என்பதை நான் பல காலமாக சொல்லி வந்திருக்கிறேன். அது நமது அமைப்பை அழித்துவிட்டது. இதன் காரணமாக எளிதில் ஊழல் செய்வதற்கான வழி ஏற்பட்டு விடுகிறது.

அதிபர் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க இன்னும் சில வாக்குகளே மிச்சம் இருக்கின்றன. ஜனநாயக கட்சியினர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். குடியரசு கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை. நாம் வெற்றி பெற வேண்டிய பல இடங்களில் வாக்குகளின் எண்ணிக்கை மாற்றப்பட்டுவிட்டது.

நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால் நான் எளிதாக வெற்றி பெறுவேன்.  ஆனால் சட்டவிரோதமான வாக்குகள் எண்ணப்பட்டால், தேர்தலை அவர்கள் நம்மிடம் இருந்து திருடிச் செல்லும் நிலை ஏற்படும்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போதை முடிவுகளின் படி ஜோ பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். 

ஜோ பிடனுக்கு 50.5 விழுக்காடு வாக்குகளும் டிரம்பிற்கு 47.9 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. தற்போதும் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிக்கின்றன. இந்நிலையில் டிரம்ப் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

No comments