காங்கேசன்துறை:ஒருவர் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!
காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார்
தெரிவித்தனர்.மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
Post a Comment