கூரையின் மீதேறி கைதிகள் ஆர்ப்பாட்டம்!!

போகம்பவர பழைய சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலை கைதிகளை தனிமைப்படுத்துவற்காக குறித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு சுமார் 800 கைதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 30 கைதிகளுக்கும் மற்றும் இரண்டு அதிகாரிளுக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் தமக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதால் தமக்கு விரைவில் பிசிஆர் பரிசோதனை செய்யுமாறும் அவ்வாறு இல்லை என்றால் வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தற்போதைய நிலையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments