கிளிநொச்சி வந்த ஒருவரால் 169 பேர் தனிமைப்படுத்தல்?




கிளிநொச்சி திருவையாறில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு கொழும்பில் இருந்து வந்த ஒருவரால் 43 குடும்பங்களைச் சேர்ந்த 169 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு மேலும் பலரை தேடும் முயற்சியில் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் இருந்து திருவையாறு மரண நிகழ்விற்கு வந்த மகளிற்கு கொரோனா உறுதி செய்த நிலையில் மரண நிகழ்விற்கு சென்ற அயலவர்கள் மரண வீட்டிற்கு சென்ற உறவினர்கனின் வீடு என இதுவரை பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று இறுதிக் கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டபோது 7 பேர் மட்டுமே சடலத்தை எடுத்துச் செல்ல சுகாதாரத் தரப்பினர் அனுமதி வழங்கினர். 

இறுதி நிகழ்விற்கு முன்னர் கொழும்பில் இருந்து வந்தவருடன் பழகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


No comments