இலங்கை:69இனால் அதிகரித்தது?


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண் இவர் வீட்டில் இறந்துள்ளார். கொவிட் நோயுடன் நீரிழிவு நோயும் இறப்புக்கு காரணமாகியுள்ளது.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண் இவர் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்துக்கு முக்கியகாரணம் கொவிட் நோயுடன் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் ஏற்பட்ட நுரையீரல் வீக்கம் என கூறப்பட்டுள்ளது.

கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண் இவர் வீட்டில் இறந்துள்ளார். கோவிட் நோய்த்தொற்றுடன் நீரிழிவு நோய் அதிகரித்ததே மரணத்திற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.


No comments