நீதியாவது?? ராஜபக்ஸ நண்பர்கள் விடுவிப்பு!

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அரச நிதி 600 மில்லியனை பயன்படுத்தி பிக்குகளிற்கான மத அனுட்டான சில் துணிகளை முறைகேடாக விநியோகித்த வழக்கில் மகிந்த குடும்ப நண்பர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

´சில் ஆடை´ வழக்கு தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மூன்று வருடம் சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகை விதிக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரை குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமதுனி விக்கிரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பினை வழங்கிய நீதிபதி குமதுனி விக்கிரமசிங்க, குறித்த வழக்கின் மனுதாரர் தரப்பினர் மற்றும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை விரிவாக பகுப்பாய்வு செய்து இந்த தீர்ப்பினை வழங்கியதாக குறிப்பிட்டார்.

No comments