செல்வமும் கண்டனம்!!


முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

“மரக்கடத்தலில் ஈடுபட்ட முறிப்பு பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும் தாக்குதல் நடத்திய நபர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் 20ற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் வனவள திணைக்களம் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடனேயே இந்த மரக்கடத்தல் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையை அழித்து எங்களையே அடித்துக்கொள்ளும் இனமானோம் நாம்.

இந்த தாக்குதலை நடத்தியது யார் இவர்கள் பின்னணி என்ன என்பதினை கண்டறிந்து, பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் நலம் பெற வேண்டுகிறேன்.” – என தெரிவித்துள்ளார்.

No comments