மட்டக்களப்பு தாதிக்கு கொரோனா?


மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதி ஒருவருக்கு கொரோணா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதி ஒருவர் தனது சொந்த ஊரான கம்பகா மாவட்டத்தில் சென்றிருந்தபோது சுகயீனமடைந்த நிலையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது .

இதனையடுத்து அவருடன் பழகிய மற்றைய நண்பர்கள் அவருடன் இருந்தவர்கள் அவர் சென்ற இடங்கள் போன்றவற்றை தற்போது பாதுகாப்பான முறையில் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துகொண்டிருக்கின்றது என Dr லதாகரன் தெரிவித்துள்ளார்

No comments